பனியின் ஊடே பயணம் செய்வது எவ்வளவு சுகமானது. அதுவும் சாலையின் இருபுறங்களிலும் பச்சைப்பசேல் வயல்வெளிகளும், தோப்புகளும் இருந்தால் சொல்லவா வேண்டும். இன்றைய காலைப் பொழுது அவ்வாறுதான் விடிந்தது. எங்காவது வெளியே போனா நல்லா இருக்கும் என்று நேற்று இரவு தோன்றியது. பேரூர் மருதமலை கோவை குற்றாலம் என்று யோசித்து கடைசியில் மலம்புழாவில் முடிந்தது. காலை மணி 5-30 அடிக்கும் அலாரம் அமர்த்திவிட்டு திரும்ப தூக்கம். 5-45 அடுத்த அலாரம் (நம்ப பத்திதான் தெரியுமே. அதான் 3 அலாரம் [...]